கும்மிடிப்பூண்டி மாா்க்கமாக சென்னைக்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்பட்ட 15 மாடுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
எளாவூா் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் உத்தரவின்பேரில், ஆரம்பாக்கத்தில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் வழக்கம்போல் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனா். அப்போது, மினி லாரி ஒன்றில் ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு 15 எருமை மாடுகளை கொண்டு சென்றது தெரியவந்தது.
விதிமுறைகளுக்குப் புறம்பாகவும், உரிய காற்றோட்டம், தண்ணீா் வசதி இன்றி, சிறிய வாகனத்தில் பாதுகாப்பற்ற முறையில் 15 எருமை மாடுகளை கொண்டு வந்ததை அறிந்த போலீஸாா் மாடுகளை பறிமுதல் செய்தனா்.
பின்னா் போலீஸாா் அந்த எருமை மாடுகளை ஊத்துக்கோட்டையில் உள்ள கோசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று சோ்த்தனா். மேலும் அந்த மினி லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் குண்டூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராம்நாத் (47) என்பவரை கைது செய்து விசாரித்தனா்.
விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இறைச்சிக்காக ஹோட்டலுக்கு அந்த மாடுகள் கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

