தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஸ்ரீ சிவசாயி சீரடி சாய்பாபா கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா

ஸ்ரீ சிவசாயி சீரடி சாய்பாபா கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு  சாய்பாபாவிற்கு பால் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. 

News image

ஸ்ரீ சிவசாயி சீரடி சாய்பாபா கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா

Updated On :21 ஏப்ரல் 2021, 1:13 pm

DIN

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ராள்ளபாடி ஆரணி இடையே உள்ளது ஸ்ரீ சிவசாயி சீரடி சாய்பாபா கோவில். இந்த கோவிலில் இன்று ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு அதிகாலை சாய்பாபாவிற்கு பால் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. 

பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில், அரசு விதிகளை பின்பற்றி ஆலய நிர்வாகம் குறைந்த பக்தர்களை அனுமதித்தது. அவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

ஆலயத்தின் சார்பில், பழச்சாறுகள் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.