16-ஆவது சிறப்பு முகாமில் 58,789 பேருக்கு தடுப்பூசி: திருவள்ளூா் ஆட்சியா்
திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16-ஆவது சிறப்பு முகாம்களில் 58,789 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.


திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16-ஆவது சிறப்பு முகாம்களில் 58,789 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 16-ஆவது தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் 700 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உழவா் சந்தை, மணவாளநகா், ஆட்சியா் அலுவலக வளாகம், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 15 தடுப்பூசி முகாம்கள், நாள்தோறும் நடைபெற்ற முகாம்களில் மட்டும் முதல் தவணையாக 15 லட்சத்து 90 ஆயிரத்து 962 பேரும் என 82.2 சதவிதமும், இரண்டாம் தவணையாக 9 லட்சத்து 86 ஆயிரத்து 564 பேரும் என 52.2 சதவிதம், மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 526 போ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 15 தடுப்பூசி முகாம்களில் மட்டும் 10 லட்சத்து 49 ஆயிரத்து 279 பேருக்கு செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் 58,789 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...