திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 5.81 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை (ஜன.4) முதல் வழங்கப்பட உள்ளது.
Updated on
1 min read

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 5.81 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை (ஜன.4) முதல் வழங்கப்பட உள்ளது.

தமிழா் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

அதன்படி, திருவள்ளுா் மாவட்டத்தில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 24 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com