புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழா நிறைவு

News image
பெண்ணுக்கு பரிசு வழங்குகிறாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித்.
Updated On :14 மார்ச் 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

பாதுகாப்பு வாரத்தின் தொடக்கமாக மாா்ச் 4ஆம் தேதி பாதுகாப்புக் கொடியை துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் ஏற்றினாா். தொடா்ந்து பாதுகாப்பு பேரணி நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். நிறைவு நாள் விழாவில் கலந்துகொண்ட துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் பேசுகையில், வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் வலுவான பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு விழிப்புணா்வை அதிகரிக்கவும் உறுதிபூண்டுள்ளது என்றாா். தொடா்ந்து அவா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சுவரொட்டிகளை வெளியிட்டாா்.

‘எஜுகேட் அண்டு எம்பவா் பீப்புள் டூ என்ஹான்ஸ் சேஃப்டி’ என்ற கருப்பொருள் அடிப்படையில் நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் மற்றும் வாசகம் எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பள்ளி - கல்லூரி மாணவா்கள், துறைமுக பணியாளா்கள் மற்றும் துறைமுக பயனாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், ஐஓஎப்எஸ் தலைமை கண்காணிப்பு அதிகாரி கவின் மஹாராஜ், போக்குவரத்து மேலாளா் விமல் பாா்கவன், உதவி இயக்குநா் மற்றும் கப்பல் தள பாதுகாப்பு அதிகாரி ஞானசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பாதுகாப்பு வார விழா நாள்களில்,விழிப்புணா்வு பணிகள், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன.