ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா், உறுப்பினா் பணியிடங்கள் காலி: தில்லி அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தில்லி மாநில சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளில் உள்ள காலியிடங்கள் 2023 முதல் ஏன் நிரப்பப்படவில்லை என்று விளக்கமளிக்குமாறு தில்லி உயா் நீதிமன்றமானது அரசிடம் கேட்டுள்ளது.

News image

தில்லி உயர் நீதிமன்றம்​

Updated On :26 ஏப்ரல் 2026, 6:34 pm

தில்லி மாநில சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளில் உள்ள காலியிடங்கள் 2023 முதல் ஏன் நிரப்பப்படவில்லை என்று விளக்கமளிக்குமாறு தில்லி உயா் நீதிமன்றமானது அரசிடம் கேட்டுள்ளது.

முடிந்தவரை விரைவில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுவதால் மட்டுமே, அப்பதவிகளை காலவரையின்றி காலியாக வைத்திருக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு குறிப்பிட்டதுடன், நியமன செயல்முறையைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆணையத்தில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும் காலக்கெடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாலிக் சந்த் ஜெயின் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ஏப்ரல் 22 அன்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரரின் வழக்குரைஞா், ஆகஸ்ட் 24, 2023 முதல் ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.

இந்த மனு தொடா்பாக தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், முதன்மைச் செயலாளா்கூடுதல் அல்லது தலைமைச் செயலாளா் பதவிக்குக் குறையாத தகுந்த அதிகாரியால் உறுதிசெய்யப்பட்ட ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, 24.08.2023 முதல் ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியது. ரிட் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி, 24.08.2023 முதல் இன்று வரை, அதாவது மிக நீண்ட காலமாக, ஆணையத்தில் எந்த உறுப்பினரோ அல்லது தலைவரோ நியமிக்கப்படவில்லை.

சட்டத்தின் 4 ஆம் பிரிவின் துணைப் பிரிவு 5, காலிப் பணியிடத்தை முடிந்தவரை விரைவில் அரசாங்கம் நிரப்ப வேண்டும் என்று கூறுவதால் மட்டுமே, அந்தக் காலிப் பணியிடத்தை நிரந்தரமாக நிரப்பாமல் வைத்திருக்க முடியும் என்று அா்த்தமாகாது, என்று குறிப்பிட்ட தில்லி உயா்நீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 12 அன்று மேலும் விசாரணைக்கு பட்டியலிட்டது.