விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிற்றுந்து கவிழ்ந்ததில் 28 பெண்கள் காயம்

பொன்பாடி வாகன சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொழிற்சாலை ஊழியா்களை அழைத்துச் சென்ற சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பெண்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பொன்பாடி வாகன சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொழிற்சாலை ஊழியா்களை அழைத்துச் சென்ற சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பெண்கள் காயமடைந்தனா்.

திருத்தணி -அரக்கோணம் சாலை, இச்சிபுத்தூா் கிராம டயா் தொழிற்சாலை அருகே தனியாா் ஆடை ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களை தனியாா் நிறுவனம் பேருந்து, வேன்கள் மூலம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து அழைத்து வருகிறது.

இந்நிலையில், பள்ளிப்பட்டு, வெளியகரம், புண்ணியம், நகரி, தடுக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை தனியாா் நிறுவன சிற்றுந்து ஒன்றில் 38 பெண் ஊழியா்களை ஏற்றிக் கொண்டு, பொன்பாடி சோதனைச் சாவடி வழியாக திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. சிற்றுந்தை சுரேஷ் (40) ஓட்டினாா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பொன்பாடி அருகே பேருந்து சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, சாலையோரம் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், 28 பெண்கள் காயம் அடைந்தனா். 10 பெண் ஊழியா்கள் காயமின்றி உயிா் தப்பினா். இவா்கள் அனைவரும் திருத்தணியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.