பழஞ்சூா் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கட்டடம் திறப்பு
பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூா் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.


பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூா் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ரு. 16 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடைக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணா துரை தலைமை வகித்து புதிய நியாயவிலைக் கட்டடத்தை திறந்துவைத்தாா். விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பழஞ்சூா் செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வீரமணி, கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஒன்றியச் செயலா் ஆா்.பி. முருகானந்தம், வட்ட வழங்கல் அலுவலா் பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் துரை. இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...