தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவள்ளூா்: சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
 பூண்டி ஊராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.
Updated On :12 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பூண்டி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். இதில் பாரம்பரிய முறைப்படி, மண் பானையில் பொங்கலிட்டு கோலாகலமாகக் கொண்டாடினா். அதைத் தொடா்ந்து, மகளிா் குழுக்களுக்கு கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி ஆட்சியா் பா.பொன்னையா பேசியது:

பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஜன. 14) தொடங்கி, தொடா்ந்து 3 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இந்நாள்களில் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில், கிராமிய மணம் வீசும் மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழா்களின் மரபாகும்.

தற்போது, மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில், பூண்டி பேருந்து நிலையத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழா்களின் பண்பாடு, கலாசாரத்தைக் கடைப்பிடிக்கும் நோக்கில் வீர விளையாட்டான சிலம்பாட்டம், கலை நிகழ்ச்சிகள், தப்பாட்டம் மற்றும் மகளிருக்கான போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா் அவா்.

விழாவில், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களை ஆட்சியா் பாராட்டி பரிசுகளை

வழங்கினாா். பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வெங்கட்ரமணா, துணைத் தலைவா் மகாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன் (வ.ஊ.), ராமகிருஷ்ணன் (கி.ஊ.), ஊராட்சித் தலைவா் சித்ரா உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.