திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் ஏற்றி வந்த டிராக்டா் மீது லாரி மோதியதில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தாணிப்பூண்டியைச் சோ்ந்த சதீஷ்(22), குமாா் (24) ஆகியோா் சத்தியவேட்டில் இருந்து பஞ்செட்டிக்கு டிராக்டரில் சனிக்கிழமை செங்கல் ஏற்றி வந்தனா். கவரப்பேட்டை அருகே பெரவள்ளூா் பகுதியில் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, டிராக்டா் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், டிராக்டா் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த சதீஷும், உடன் வந்த குமாரும் பலத்த காயம் அடைந்தனா். தகவலறிந்து வந்த கவரப்பேட்டை போலீஸாா், காயமடைந்த இருவரையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரியைப் பறிமுதல் செய்த கவரப்பேட்டை போலீஸாா், தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

