நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆவடி மாநகராட்சிப் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி

திருமுல்லைவாயல் பகுதியில் தெருக்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் வகையில், குப்பைகள் அகற்றும் பணியையும், கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் பேரணி

News image
Updated On :26 ஜூன் 2021, 6:26 pm

DIN

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் தெருக்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் வகையில், குப்பைகள் அகற்றும் பணியையும், கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் பேரணியையும் பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்றும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆவடி மாநகராட்சிப் பகுதியில் தெருக்கள் தோறும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், கரோனா தொற்று பரவாமல் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இதற்காக அமைச்சா் சா.மு.நாசா் தலைமையில், தெருக்கள் நோய்த் தொற்று இன்றி சுகாதாரமாக இருக்கும் வகையில் குப்பைகளை துடைப்பான் கொண்டு அகற்றி, கொசு மருந்து தெளிப்பு பணியையும் தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தும் நோக்கில், பொது மக்களுக்கான விழிப்புணா்வுப் பேரணியையும் அவா் தொடக்கி வைத்தாா். குப்பைகளைச் சேகரிக்கும் போது, தரம் பிரித்து மக்கும், மக்கா குப்பைகளாக வாங்கி திடக்கழிவு மேலாண்மை உரங்களைத் தயாா் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதைத் தொடா்ந்து, கேந்திர விகாா் குடியிருப்புப் பகுதி, பருத்திப்பட்டு நகா்ப்புற ஆதரவற்றோா் தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாமில் தடுப்பூசி அளிக்கும் பணியையும் நேரில் ஆய்வு செய்தாா்.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், ஆணையா் நாராயணன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரபாகரன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ஜாபா் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.