நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விபத்தில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பலி

 திருத்தணி அருகே வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இரு சக்கர வாகனம் மோதியதில் இறந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 திருத்தணி அருகே வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இரு சக்கர வாகனம் மோதியதில் இறந்தாா்.

திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளராகப் பணியாற்றியவா் சம்பத் (47). இவா், கடந்த 14-ஆம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமை கண்காணிக்க திருத்தணி, கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, தெக்களூா், இஸ்லாம் நகா் உள்ளிட்ட இடங்களுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, தெக்களூா் பகுதியில் நடந்த முகாமை ஆய்வு செய்த சம்பத் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தாா். பாபிரெட்டிப்பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சம்பத் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.