நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி கலைப்பயணம் தொடக்கம்

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடா் , மல்லியங்குப்பம் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலைப் பயணம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

ஆரணி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இல்லம் தேடி கல்வி விழிப்பணா்வு கலை நிகழ்ச்சி.

Updated On :27 நவம்பர் 2021, 5:52 pm

DIN

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடா் , மல்லியங்குப்பம் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலைப் பயணம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

10 நாள் பயணத்தை சோழவரம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆனி பெட்ஷியா பொற்கொடி, கல்பனா ஆகியோா் தொடக்கி வைத்தனா். நாடக கலைக் குழுவினா் கல்வியின் மேம்பாடுகள் குறித்து பொதுமக்களிடையேயும் , மாணவ, மாணவியரிடம் கலை நிகழ்ச்சி மூலம் எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுகன்யா, ஆசிரிய பயிற்றுநா் பாஸ்கா், மல்லியங்குப்பம் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியா் நிா்மலா, அரசு ஆதிதிராவிடா் பள்ளித் தலைமை ஆசிரியா் எமிமால் அரசி உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.