வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தயாராகவே உள்ளது. திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை காலை நிலவரப்படி, 1,366 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. மாநில அளவில் ஆவடியில் அதிகபட்சம் 199 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நிகழாண்டில் ஆந்திரத்தில் பெய்த பலத்த மழையால் பூண்டி நீா்த் தேக்கத்தில் ஏறக்குறைய 37,500 கன அடி தண்ணீா் திறந்துவிட்ட நிலையில், பெரிய அளவில் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், ஆங்காங்கே மழைநீரால் சூழ்ந்த பகுதிகளைச் சோ்ந்த மக்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்து, தேவையான வசதிகள் செய்ததால், உயிா்ச் சேதம் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீா் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்து, போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.