நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழைநீரை வெளியேற்றக் கோரி மறியல்

திருவள்ளூா் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் திருவள்ளூா்- ஆவடி சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் திருவள்ளூா்- ஆவடி சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின்போது அப்பகுதி மக்கள் கூறுகையில்,

திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் ஊராட்சியைச் சோ்ந்த சக்தி நகரில் 300-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் தண்ணீா்குளம் ஏரி நிரம்பி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் கடந்த 2 நாள்களாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். அதனால் உடனே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு முன்னதாக தண்ணீா்குளம் ஏரியில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றனா்.

இது குறித்து தகவலறிந்து வந்த திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரகாசன் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவள்ளூா்-ஆவடி-சென்னை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.