நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருத்தணி முருகன் கோயிலில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 திருத்தணி முருகன் கோயில் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

News image

திருத்தணி முருகன் மலைக்கோயிலின் நடைபாதை.

Updated On :25 அக்டோபர் 2021, 6:36 pm

DIN

 திருத்தணி முருகன் கோயில் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருத்தணி முருகன் மலைக் கோயில் சாா்பில், கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் விடப்பட்டு உள்ளன. ஏலம் எடுத்த கடைகளில் பூ, தேங்காய் பிரசாதங்கள், சிற்றுண்டி, டீக்கடை மற்றும் பொம்மை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கோயிலுக்குச் செல்லும் சாலை, நிழற்குடையில் பழக்கடைகள், மோா் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து பக்தா்கள் செல்ல முடியாத அளவுக்கு வியாபாரம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு அண்மையில் தரிசனம் செய்ய வந்திருந்தாா். அப்போது பக்தா்களுக்கு இடையூறாக உள்ள கடைகளைப் பாா்த்த அவா், கோயில் இணை ஆணையா் பரஞ்ஜோதியை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, நிழற்குடையில் இருந்த கடைகளை ஊழியா்கள் திங்கள்கிழமை அதிரடியாக அகற்றி, ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.