மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுவாயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் 7 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் திறந

News image
புதுவாயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்.
Updated On :6 செப்டம்பர் 2021, 6:14 am

DIN

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் 7 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்தார். 
கும்மிடிப்பூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், விவசாயிகள் விளைவித்த நெல்லை இடைதரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதால், உரிய விலையின்றி விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தனது தேர்தல் வாக்குறுதியில் கும்மிடிப்பூண்டி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கும்மிடிப்பூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி தந்திருந்தார்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதிதியில் புதுவாயல், கீழ்முதலம்பேடு, மேல் முதலம்பேடு, தண்டலச்சேரி, கெட்ணமல்லி, ஏ.என்.குப்பம், பாலவாக்கம் ஆகிய 7 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். தொடர்ந்து இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் திறப்பு விழா புதுவாயலில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் சுமித்ரா, தரக் கட்டுப்பாடு துணை மேலாளர் மருதநாயகம், பருவகால பட்டியல் எழுத்தாளர் மோகன்ராஜ், துணை வேளாண் அலுவலர் அருள்முருகன், புதுவாயல் ஊராட்சித் தலைவர் அற்புதராணி சதீஷ்குமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் பிரபாகர், திமுக ஊராட்சி செயலாளர் சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகள் முன் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், புதுவாயல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 7 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 20 விவசாய கிராமங்கள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தால் பயன்பெற உள்ளன. இனி விவசாயிகள் அவர்கள் உற்பத்தி செய்த நெல்லை இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் இடைதரகர் விற்பனை செய்யலாம். 
தற்போது நெல்லின் ஈரப்பதத்தை பரிசோதித்த பிறகு 1 கிலோ நெல் 19.58 ரூபாயாக இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்றவர், கும்மிடிப்பூண்டியில் தொகுதியில் மேலும் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றியகவுன்சிலர் இந்திரா திருமலை, கீழ் முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம்,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், பாஸ்கரன், அறிவழகன், பரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.