காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தச்சூர் முதல் சித்தூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தச்சூர் முதல் சித்தூர் வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு முப்போகம் விளையும் நிலத்தை அளிக்காமல்

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 7:18 am

DIN

திருவள்ளூர்: தச்சூர் முதல் சித்தூர் வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு முப்போகம் விளையும் நிலத்தை அளிக்காமல், மாற்றுப்பாதையில் அமைக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் கோ.சம்பத் தலைமை வகித்தார். ஊத்துக்கோட்டை வட்டாரக்குழு குணசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் விவசாயிகள் ஒப்புதல் இன்றி அளவீடு செய்து எல்லைக்கல் நடக்கூடாது. காவல்துறையை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தக் கூடாது, விவசாயிகளை அநாகரிகமாக பேசுகின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் ஏரி நீர் நிலைகளை அழிக்காமல், திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட  துணைச் செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் மாரிமுத்து வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.