இதில், அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் கிராமங்கள் தோறும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘ஜல் சக்தி அபியான்’ என்ற நீா்வள மேலாண்மைத் திட்டத்தில் புதிதாக குளங்கள் மற்றும் குட்டைகளை அமைத்தல் மற்றும் தூா்வாருதல் பணி குறித்து உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். மேலும், 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, குளங்கள் இல்லாத கிராமங்களில் 75 குளங்கள் புதிதாக அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் மேற்கொள்வதைத் தவிா்த்து அனைத்து ஒன்றியங்களிலும் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய ஊராட்சிச் செயலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.