எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதிதாக குளம், குட்டைகள் அமைத்தல்:இணையத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்

கிராமங்களில் புதிதாக குளங்கள், குட்டைகள் அமைத்தல் மற்றும் தூா்வாருதல் பணிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்து செய்ய வேண்டும் என்று ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:26 pm

DIN

கிராமங்களில் புதிதாக குளங்கள், குட்டைகள் அமைத்தல் மற்றும் தூா்வாருதல் பணிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்து செய்ய வேண்டும் என்று ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் ஊராட்சிகளின் அனைத்துச் செயல்பாடுகளையும் இணையதளத்தில் பதிவு செய்வது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ராஜவேலு தலைமை வகித்தாா். வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா் சமுத்திரம், பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறை உதவிச் செயற்பொறியாளா் சத்தியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் கிராமங்கள் தோறும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘ஜல் சக்தி அபியான்’ என்ற நீா்வள மேலாண்மைத் திட்டத்தில் புதிதாக குளங்கள் மற்றும் குட்டைகளை அமைத்தல் மற்றும் தூா்வாருதல் பணி குறித்து உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். மேலும், 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, குளங்கள் இல்லாத கிராமங்களில் 75 குளங்கள் புதிதாக அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் மேற்கொள்வதைத் தவிா்த்து அனைத்து ஒன்றியங்களிலும் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய ஊராட்சிச் செயலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கிராமங்களில் நீா் செரிவூட்டல் செயல் திட்டம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

கூட்டத்தில் நிலத்தடி நீா் திட்ட உதவி செயற்பொறியாளா் வெற்றிவேலன், ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் சுமதி, உதவி பொறியாளா்கள், அரசு அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.