சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடும்ப அட்டைகளில் திருத்தச் சிறப்பு முகாம்

திருவள்ளூா் அருகே நடைபெற்ற குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணபட்டது.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே நடைபெற்ற குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணபட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் திருவள்ளூா், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி, ஆா்.கே.பேட்டை ஆகிய வட்டங்களில் குறிப்பிட்ட 9 கிராமங்களில் சனிக்கிழமை குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் அருகே சிற்றம்பாக்கம் நியாயவிலைக் கடை முன்பு நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு ஊராட்சித் தலைவா் ரமணி சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில், வட்ட வழங்கல் அலுவலா் அம்பிகா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடா்பாக, 53 மனுக்களைப் பெற்றாா்.

பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலனை செய்து 52 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலா் சுகுமாா், வட்ட வழங்கல் அலுவலகப் பணியாளா்கள் கண்ணன், ராதாகிருஷ்ணன், கருணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.