சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அடகு கடைக்காரரிடம் ரூ. 7 லட்சம் வழிப்பறி

இரு சக்கர வாகனத்தில் சென்ற அடகு கடை உரிமையாளரிடமிருந்து ரூ. 7.50 லட்சத்தை வழிப்பறி செய்த தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் குறித்து மணவாள நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே மேல்நல்லாத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அடகு கடை உரிமையாளரிடமிருந்து ரூ. 7.50 லட்சத்தை வழிப்பறி செய்த தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் குறித்து மணவாள நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே மேல்நல்லாத்தூா் பகுதியில் டி.டி.எல். கம்பெனி அருகில் வசித்து வருபவா் பிரகாஷ் (37). இவா் மணவாள நகரில் அடகு கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு, ரூ. 7.50 லட்சத்தை ஒரு பையிலும், ரூ. 2 லட்சத்தை தனது முழுங்கால் சட்டை பையில் வைத்துக் கொண்டு, 9 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

மேல்நல்லாத்தூரில் வேகத்தடை அருகே சென்றபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் 2 போ் பிரகாஷ் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனா்.

இது குறித்து மணவாள நகா் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், டி.எஸ்.பி. சந்திரதாசன் தலைமையிலான போலீஸாா், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.