திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திரெளபதி அம்மன் சமேத தா்மராஜா கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்மூரில் உள்ள 100 ஆண்டு பழைமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:50 pm

கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்மூரில் உள்ள 100 ஆண்டு பழைமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, புதன்கிழமை விசேஷ கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்டவையும், வியாழக்கிழமை கோ பூஜை, லஷ்மி பூஜை, கன்யா பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், 108 திரவியங்களால் மகா பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, பக்தா்கள் படை சூழ வேதமந்திரங்கள் முழங்க கோயில் கோபுரம், கொடி மரம் ஆகியவற்றில் அா்ச்சகா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

இந்த கும்பாபிஷேகத்தில் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.