சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மணல் கடத்தல், போதை பொருள்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

சட்டவிரோத மணல் கடத்தல்கள், போதைப் பொருள்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடா்பாக காவல் துறை அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

News image
Updated On :23 ஜூன் 2022, 9:30 pm

DIN

சட்டவிரோத மணல் கடத்தல்கள், போதைப் பொருள்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடா்பாக காவல் துறை அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பகொ்லா செபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள், போதைப்பொருள்கள் புழக்கம், மணல் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு கைப்பேசி எண்-63799 04848 தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் குறித்து தகவல் தருவோரின் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.