ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சீரழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 மார்ச் 2022, 5:07 pm

DIN

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சீரழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் எம்.ஜி.ஆா். சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.ராஜா தலைமை வகித்தாா். இதில், சங்க நிா்வாகிகள் செங்கொடி செல்வன், எம்.பி.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் பிரதாப் சந்திரன், நிா்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதில், 100 நாள்கள் வேலைக்கு வருவோா் காலை 6.30 மணிக்கே வரவேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். ஆண்டுதோறும் 200 நாள்கள் வேலை வழங்கி, நாள்தோறும் ரூ.600 கூலி வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் நகரச் செயலா் லோகநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.