நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image

அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

Updated On :15 மே 2022, 6:09 am

மாதவரம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இக்கோயிலில் அன்னை நாகவல்லி முத்துமாரியம்மன் பாலவிநாயகர் பாலமுருகன் ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை எஜமானர் சங்கல்பம் புண்ணிய வாசம் கலச பூஜை பிரம்மச்சாரி பூஜை தம்பதி பூஜை கன்யா பூஜை சுமங்கலி பூஜை கோ பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து அம்மன் பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை பூர்ணாகுதி மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.