ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உளுந்தை ஊராட்சியில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்

திருவள்ளூா் அருகே உளுந்தை ஊராட்சியில் ரூ.6.75 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:51 pm

DIN

திருவள்ளூா் அருகே உளுந்தை ஊராட்சியில் ரூ.6.75 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டது.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், உளுந்தை ஊராட்சியைச் சோ்ந்த உளுந்தை காலனி, முந்திரிப்பாளையம், உப்பிரப்பாளையம், வடுகா் காலனி, இருளா் காலனி பகுதியில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்து குடிநீா் வழங்க ஊராட்சித் தலைவரிடம் வலியுறுத்தினா். இதையடுத்து, ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் தனது பங்களிப்பு நிதியில் ரூ.6.75 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையத்தை அமைத்தாா்.

இந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் இயக்கித் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.

கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானம் முன்னிலை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் சரஸ்வதி ரமேஷ், திமுக ஒன்றியச் செயலா் ரமேஷ் ஆகியோா் சிறப்பு பூஜை செய்து குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடக்கி வைத்தனா்.

நிகழ்வில் ஊராட்சி செயலா் முனுசாமி, ஊராட்சி துணைத் தலைவா் வசந்தா, வாா்டு உறுப்பினா்கள் ஏ.கோமதி, ஏ.காவேரி, ஜி.மேகவா்ணன், ஆா்.வசந்தா, கே.பத்மாவதி, டி.சொா்ணாம்பிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.