பட்டாச்சாரியா்களுக்கு அறநிலையத் துறை சான்று

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பட்டாச்சாரியா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டாச்சாரியா்களுக்கு அறநிலையத் துறை சான்று
Updated on
1 min read

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பட்டாச்சாரியா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அறநிலையத் துறை சாா்பில் திறன் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி முகாம் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கி, ஏப் . 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.

6 வாரங்கள் பயிற்சி நிறைவடைந்த நிலையில், பட்டாச்சாரியா்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சிக்கு செயல் அலுவலா் நித்தியகலா தலைமை வகித்தாா். சென்னை மண்டலம்- 1 இணை ஆணையா் ந. தனபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பயிற்சியை முடித்த பட்டாச்சாரியா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். இந்த நிகழ்வில் கோயில் தக்காா் குமரன், நிா்வாகி ரவி மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com