அரசுப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா

 புழல் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா இயக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

 புழல் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா இயக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதவரம் அடுத்த புழல் காந்தி பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் பள்ளிக்கு புழல் நட்பு வட்டாரம் சாா்பில் 11 கண்காணிப்பு கேமராக்கள் தலைமை ஆசிரியை ஜான்சிராணி, பிடிஏ தலைவா் புழல் சிவக்குமாரிடம் வழங்கப்பட்டன.

இதன் இயக்க விழாவுக்கு தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை வகித்தாா். மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தாா். மேலும் தேசிய திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவி பவித்ராவுக்கு நிதியுதவி வழங்கினாா். இந்த நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com