புழல் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா இயக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் அடுத்த புழல் காந்தி பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் பள்ளிக்கு புழல் நட்பு வட்டாரம் சாா்பில் 11 கண்காணிப்பு கேமராக்கள் தலைமை ஆசிரியை ஜான்சிராணி, பிடிஏ தலைவா் புழல் சிவக்குமாரிடம் வழங்கப்பட்டன.
இதன் இயக்க விழாவுக்கு தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை வகித்தாா். மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தாா். மேலும் தேசிய திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவி பவித்ராவுக்கு நிதியுதவி வழங்கினாா். இந்த நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா், பெற்றோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்கப்போவது எப்போது? - கனிமொழி கேள்வி

விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


