திருவள்ளூா் சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பு அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆக.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உதவியாளா், எழுத்தா், வரவேற்பாளா் மற்றும் கணிப்பொறி இயக்குநா் (தட்டச்சா்) மற்றும் பியூன் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்தப் பணிக்கு தகுதியானவா்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான பணி விவரங்கள், தகுதிகள், விண்ணப்ப படிவம் மற்றும் இதர தகவல்களை ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ள்.ங்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ண்ழ்ன்ஸ்ஹப்ப்ன்ழ் என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.
நிறைவு செய்த விண்ணப்பங்களை ஆக.18-ஆம் தேதிக்குள் தலைவா், திருவள்ளூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருவள்ளூா் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலிலோ அல்லது நேரிலோ அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.