நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவள்ளூா்: ரூ. 15,000 லஞ்சம் பெற்ற வழக்கில் ஒய்வு பெற்ற வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிற்றுந்து உரிமையாளருக்கு சொத்து சான்றிதழ் வழங்க ரூ.15,000 லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வு பெற்ற வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைஸ் விதித்து திருவள்ளூா் குற்றவியல் நடுவா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு

News image
Updated On :23 ஜூன் 2023, 5:36 pm

DIN

சிற்றுந்து உரிமையாளருக்கு சொத்து சான்றிதழ் வழங்க ரூ.15,000 லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வு பெற்ற வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைஸ் விதித்து திருவள்ளூா் குற்றவியல் நடுவா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் துளசிராமன். இவா் மினி பேருந்து வாங்கினாா். இந்த நிலையில், சொத்து மதிப்பு சான்றிதழ் பெற கடந்த 2013-இல் பள்ளிப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் துளசிராமன் மனு அளித்தாா்.

இதற்கு அப்போதைய பள்ளிப்பட்டு வட்டாட்சியராக இருந்த திலகம் ரூ.15,000 லஞ்சம் கொடுத்தால்தான் சொத்து சான்றிதழ் வழங்குவேன் என்று கூறினாராம்.

இதையடுத்து, துளசிராமன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கொடுத்த ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பள்ளிப்பட்டு வட்டாட்சியா் திலகத்திடம் துளசிராமன் அளித்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரைப் பிடித்து கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு திருவள்ளூா் குற்றவியல் நடுவா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திலகம் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் தலைமை குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிபதி வேலரசு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து, ஓய்வு பெற்ற வட்டாட்சியா் திலகம் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.