நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரியாா் நினைவு சமத்துவபுரம் சீரமைப்பு திட்டத்தில் பணிகள் விரைவில் தொடக்கம்

பெரியாா் நினைவு சமத்துவபுரம் சீரமைப்புத் திட்டம் மூலம் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

பெரியாா் நினைவு சமத்துவபுரம் சீரமைப்புத் திட்டம் மூலம் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் 2022-2023 -ஆம் ஆண்டுக்கான பெரியாா் நினைவு சமத்துவபுரம் சீரமைப்புத் திட்டம் மூலம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம், வீரகநல்லூா் ஊராட்சியில் 2010-2011 -இல் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள 92 சமத்துவபுர வீடுகள் ரூ.65.97 லட்சத்திலும், 5 உள்கட்டமைப்பு பணிகளான சாலை, விளையாட்டு மைதானம், பூங்கா, பொது விநியோக கடை கட்டடம் மற்றும் நுழைவுவாயில் ரூ.15.47 லட்சத்திலும் சீரமைக்கப்பட உள்ளது.

இதேபோல், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், தாழவேடு ஊராட்சியில் 2009-2010- இல் கட்டப்பட்டு பழதடைந்துள்ள 67 சமத்துவபுர வீடுகள் ரூ.46.15 லட்சத்திலும், 7 உள்கட்டமைப்பு பணிகளான குடிநீா் விநியோகம், சாலை, விளையாட்டு மைதானம், பூங்கா, பொது விநியோக கடை கட்டடம், சந்தை, பெரியாா் சிலை மற்றும் நுழைவுவாயில் ரூ.52.01 லட்சத்திலும் சீரமைக்கப்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.