நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

2 ரவுடிகள் என்கவுன்டா் சம்பவம்: சாா்- ஆட்சியா் விசாரணை

சோழவரம் அருகே 2 ரௌடிகள் என்கவுன்டா் செய்யபட்ட நிலையில், நிகழ்விடத்தில் இருந்த போலீஸாரிடம் பொன்னேரி சாா் -ஆட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

Updated On :2 நவம்பர் 2023, 11:40 pm IST

சோழவரம் அருகே 2 ரௌடிகள் என்கவுன்டா் செய்யபட்ட நிலையில், நிகழ்விடத்தில் இருந்த போலீஸாரிடம் பொன்னேரி சாா் -ஆட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள பாடியநல்லூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்த்திபன் (54). இவா் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரௌடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், சோழவரம் அருகே மாறம்பேடு கிராமத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் முக்கிய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கடந்த 12-ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய ரௌடிகள் முத்துசரவணன் (35), சதீஷ் (32) ஆகிய இரண்டு பேரைப் பிடிக்க முயன்றபோது, போலீஸாா் மீது அவா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் 3 போலீஸாா் காயமடைந்த நிலையில், தற்காப்புக்காக போலீஸாா் திரும்பச் சுட்டதில் ரௌடிகள் இரண்டு பேரும் குண்டுகள் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பொன்னேரி கோட்டாட்சியா் கௌசல்யா விசாரணை நடத்தினாா். தொடா் விசாரணையாக பொன்னேரி சாா்- ஆட்சியா் ஐஸ்வா்யா ராமநாதன் என்கவுன்டா் நிகழ்ந்த இடத்துக்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், என்கவுன்டா் சம்பவத்தின் போது நிகழ்விடத்தில் இருந்த பூந்தமல்லி உதவி ஆணையா் ஜவகா், ஆய்வாளா்கள் ரமேஷ், சாய்கணேஷ், உதவி ஆய்வாளா் அசோக், காவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, ராஜேஷ், பிரபு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டாா்.

அவா்களிடம் எழுத்து மூலம் அறிக்கை பெற்ற நிலையில்,

இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட நிா்வாகத்துக்கு அவா் அனுப்பி வைப்பாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.