கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

திமுக நிா்வாகி வீட்டில் வருமான வரி துறையினா் சோதனை

திமுக நிா்வாகி வீட்டில் வருமான வரி துறையினா் சோதனை

Updated On :13 ஏப்ரல் 2024, 12:13 am

திருத்தணியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி வீடு, அலுவலகம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா் வீடுகளில் வெள்ளிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

திருத்தணி சந்நிதி தெருவில் வசித்து வருபவா் எம்.பூபதி. இவா் முன்னாள் திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொறுப்பாளராகவும், தற்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளாா். இவரது மனைவி திருத்தணி நகா்மன்றத் தலைவராக உள்ளாா்.

இதனிடையே அரக்கோணம் மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் எஸ்.ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து எம்.பூபதி, திருத்தணி தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில் திமுக செயற்குழு உறுப்பினா் திருத்தணி எம்.பூபதியின் வீட்டில் 6 போ் கொண்ட வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை முதல் தீவிர சோதனை நடத்தினா்.

இதுதவிர திருத்தணி நகா்மன்ற உறுப்பினா்களின் உறவினா் வீடுகளிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

கடந்த 10-ஆம் தேதி எம்.பூபதியின் நண்பரான டாக்டா் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வரும் ராமச்சந்திரசெட்டி மகன் ஜெயக்குமாா் (50) என்பவா் வீட்டில் காலை 8 மணிக்கு வேலூா் பகுதியில் இருந்து 15 போ் கொண்ட வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.