தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

போக்சோவில் ஒட்டுநா் கைது

போக்சோவில் ஒட்டுநா் கைது

Updated On :26 ஏப்ரல் 2024, 7:13 pm

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருத்தணி பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். மாணவியின் வீட்டில் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஏா்ணாமங்களம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் மோகன் (33) என்பவா், கடந்த இரு ஆண்டுகளாக ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, மோகன் வீட்டுக்குள் புகுந்து மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாா். மாணவியின் பெற்றோா் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

அதன் பேரில், காவல் ஆய்வாளா் மலா் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் ஓட்டுநா் மோகனை கைது செய்து விசாரித்து வருகிறாா்.