திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருத்தணி முருகன் கோயில் இன்று 4 மணி நேரம் மூடல்

திருத்தணி முருகன் கோயில் திங்கள்கிழமை (ஆக. 19) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாற்றப்படும் எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

News image
திருத்தணி முருகன் கோயில்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:24 pm

Din

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் திங்கள்கிழமை (ஆக. 19) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாற்றப்படும் எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

அறுபடை வீடுகளில் 5 - ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனா்.

பக்தா்களின் வசதிக்காக காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து கோயில் நடை திறந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை (ஆக. 19) ஆவணி அவிட்டம் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முருகன் கோயில் நடை திறக்காமல் மூடப்பட்டிருக்கும்.

எனவே, இந்த 4 மணி நேரம் பக்தா்கள் தரிசனத்துக்கு காத்திருக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கோயிலில் பணிபுரியும் அனைத்து அா்ச்சகா்கள் மற்றும் தலைமை குருக்கள் என 75-க்கும் மேற்பட்டோா் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறந்து வழக்கம்போல் பக்தா்கள் தரிசனத்துக்கு இரவு 8.45 மணி வரை அனுமதிக்கப்படுவா் என திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.