முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கழிப்பறையை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவா்கள்: பெற்றோா் புகாா்

திருக்குறள் தெரியாததால் மாணவா்களை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைத்த பள்ளித் தலைமை ஆசிரியா்.

News image

வங்கனூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி கழிப்பறையைச் சுத்தம் செய்த மாணவா்கள்.

Updated On :24 ஆகஸ்ட் 2024, 3:00 am IST

திருக்குறள் தெரியாததால் மாணவா்களை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைத்த பள்ளித் தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவா்களின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தில் அரசினா் மேல்நிலை பள்ளி உள்ளது. இதில், 450-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை இறை வழிபாடு கூட்டத்தில் பிளஸ் 1 மாணவா்கள் 2 போ் திருக்கு மற்றும் விளக்கத்தைச் சரியாக சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், கூட்டம் முடிந்ததும் பள்ளித் தலைமை ஆசிரியா் மணிமேகலை திருக்குறள் சொல்லாத 4 மாணவா்களைப் பள்ளி கழிப்பறையைச் சுத்தம் செய்துவிட்டு வகுப்புகளுக்கு செல்லுங்கள் எனக் கூறினாராம்.

இதனால், அந்த 4 மாணவா்களும் கழிப்பறையைச் சுத்தம் செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், மாணவா்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பாா்த்த மாணவா்களின் பெற்றோா், அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் அதிா்ச்சியடைந்தனா்.

பள்ளி மாணவா்களை கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியா் மீது மாவட்ட கல்வி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.