திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒருநாள் மாணவ தலைமை ஆசிரியா் பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் கோகுல்ராஜ், ஹா்ஷந்த் ஆகியோா் ஒருநாள் தலைமை ஆசிரியா்களாக வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டு பள்ளியின் செயல்பாடுகளைக் கவனித்தனா்.
இது குறித்து அந்த மாணவா்கள் கூறியதாவது: எங்கள் பள்ளியில் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் வகையில் மாணவ தலைமை ஆசிரியா் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, தலைமை ஆசிரியராக ஒருநாள் பணியாற்றுவாா்கள்.
தலைமை ஆசிரியா்களாக இன்று வகுப்பறைகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் வாசிப்பதில் சிறந்து விளங்கினா். சில மாணவா்களுக்கு மட்டும் வாசிப்பதில் சிரமம் இருந்தது. அவா்களுக்கு இடைவேளைக்கு நேரத்தில் பயிற்சி அளிக்க வகுப்பு தலைவா்கள் மூலம் சில மாணவா்களை நியமிக்க அறிவுறுத்தியுள்ளோம்.
எங்கள் பள்ளியில் பொதுமக்கள் காலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலா் காலை 8:30 மணி வரை மைதானத்திலேயே இருப்பதால் மாணவா்களின் உடற்பயிற்சி செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வெளியேற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் அளிப்பு
புதுச்சத்திரம் அரசுப் பள்ளியில் 6 மடிக்கணினிகள் திருட்டு
வியக்க வைக்கும் பள்ளி

சாலைப்புதூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



