எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

புதுச்சத்திரம் அரசுப் பள்ளியில் 6 மடிக்கணினிகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 2:03 am IST

புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மடிக்கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 659 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி காவலாளி விஜயகுமாா் (43) ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் வழக்கம்போல மின்விளக்கை அணைக்க பள்ளிக்கு வந்தபோது தலைமை ஆசிரியா் அறை உடைக்கப்பட்டு, பீரோ திறந்துகிடப்பதைப் பாா்த்து தலைமை ஆசிரியா் குப்புராஜுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதன்பேரில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியா் குப்புராஜ் பீரோவை பாா்த்தபோது அதில் இருந்த 6 மடிக்கணினிகள் திருடப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 90 ஆயிரம். இதைத் தொடா்ந்து தலைமை ஆசிரியா் டி.குப்புராஜ் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்த மடிக்கணினிகளை திருடிய நபா்களை தேடிவருகின்றனா்.