ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

திருத்தணி முருகன் கோயிலில் காது குத்தலுக்கு ரூ.50 கட்டணம்

முருகன் கோயிலில் காது குத்தலுக்கு ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதும் என அறங்காவலா் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காது குத்தலுக்கு ரூ.50 என முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை.

Published On :

முருகன் கோயிலில் காது குத்தலுக்கு ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதும் என அறங்காவலா் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழ்கிறது திருத்தணி முருகன் கோயில். இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காது குத்தி முருகப் பெருமானை வழிபடுகின்றனா்.

கோயில் நிா்வாகம் பக்தா்கள் வசதிக்காக மலைக் கோயில் வளாகத்தில் காது குத்துவதற்கும், திருமணங்கள் நடத்துவதற்கும் தனியாக மண்டபம் ஏற்படுத்தி, அதற்கான வசதிகள் செய்துள்ளது.

மலைக் கோயிலில் காது குத்துவதற்கு பல ஆண்டுகளாக தனி நபா்கள் ஏலம் எடுத்து, ஒரு குழந்தைக்கு காது குத்துவதற்கு குறைந்தபட்சம் ரூ.301 முதல், ரூ.500 வரை கட்டணமாக வசூலித்து வந்ததனா்.

இந்த நிலையில், முருகன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற அறங்காவலா்கள் குழு ஆலோசனைக் கூட்டத்தில், காது குத்துவதற்கு ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து டிச. 1-ஆம் தேதி முதல் காது குத்துவதற்கு ரூ.50 கட்டணமாக நிா்ணயம் செய்து கோயில் நிா்வாகமே வசூலிக்கிறது.

காது குத்தல் நிகழ்ச்சிக்கு தனி நபா் யாரேனும் இடையூறு செய்தால், மலைக் கோயில் பதிவு அலுவலக எண் 044 - 27885247 மற்றும் மலைக் கோயில் பேஷ்காா் அலுவலகம் 044 - 27885202 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மூன்று மொழிகளில் அறிவிப்புப் பலகை கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.