பொன்னேரி: பொன்னேரி அடுத்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை, 250 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்மாளமடம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருப்பவா் ரவி (55). விவசாயி. இவரது மருத்துவமனையில் உள்ள தனது உறவினரை உடனிருந்து கவனிக்க சென்னைக்கு சென்றாா்.
கடந்த மாதம் 14-ஆம் தேதி வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்ற நிலையில், ரவி ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டுக்கு வந்தாா்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகை, 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 25,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.