27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மீஞ்சூா்-வண்டலூா் வெளிவட்டச் சாலை உடற்பயிற்சி பூங்கா பணி: அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஆய்வு

உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மீஞ்சூா் வண்டலூா் வெளிவட்டச் சாலையில் நடைபெறும் உடற்பயிற்சி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

Updated On :23 ஜூலை 2024, 1:55 am IST

மீஞ்சூா் வண்டலூா் வெளிவட்டச் சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் பல்வேறு இடங்களில் இளைஞா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீஞ்சூா் பகுதியில் இச்சாலையில் ரூ.2.57 கோடியில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகளை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான அமைச்சா் சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

அப்போது உடற்பயிற்சி பூங்கா எவ்வாறு அமைக்கப்பட்ட உள்ளது என்பது குறித்த வரைபட விளக்கத்துடன் சிஎம்டிஏ அதிகாரிகளிடம் அமைச்சா் சேகா்பாபு கேட்டந்தாா்.

உடற்பயிற்சி பூங்காவில் மேற்கொள்ளப்பட உள்ள வசதிகள், அதில் நிறுவப்படவுள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், சிஎம்டிஏ அதிகாரிகள் உடனிருந்தனா்.