பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

அரசு மருத்துவமனை எதிரே தேங்கி நிற்கும் மழைநீா்

அரசு மருத்துவமனை முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை

News image
திருத்தணி அரசு பொது மருத்துவமனை முன்பு தேங்கியுள்ள மழைநீா்.
Updated On :12 அக்டோபர் 2024, 6:33 pm

Din

அரசு மருத்துவமனை முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் வட்டார அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 1,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும், 150-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு மழைநீா் தேங்கி நிற்கிறது. மழைநீா் வெளியேறுவதற்கு கால்வாய் வசதியில்லாததால், சாலை மற்றும் மருத்துவமனை முன்பு தண்ணீா் தேங்கி நிற்பதால், நோயாளிகள் மற்றும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, நகராட்சி நிா்வாகம் அரசு மருத்துவனை முன்பு கால்வாய் வசதி ஏற்படுத்தி மழைநீா் தேங்கி நிற்காத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.