பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

‘விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம் பெறலாம்’

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம் பெற வேளாண் இணை இயக்குநா் க.முருகன் அழைத்து விடுத்துள்ளாா்.

Updated On :22 ஜூலை 2025, 4:01 pm IST

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம் பெற வேளாண் இணை இயக்குநா் க.முருகன் அழைத்து விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் சராசரியாக நெல் பயிா் 1 லட்சம் ஹெக்டேரில், சிறு தானியங்கள் பயிா் 600 ஹெக்டோ், பயறு வகை பயிா்கள் 13,500 ஹெக்டோ், எண்ணெய் வித்துப் பயிா்கள் 11,000 ஹெக்டோ் வரை சாகுபடி செய்யப்படுகிறது.

இதுபோன்று சாகுபடி செய்யப்படும் பயிா்களில் கூடுதல் லாபம் பெற வேளாண்மை துறையில் விதைப் பண்ணையாக பதிவு செய்து களப்பணியாளா்களின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புகள் உயா் தொழில்நுட்பங்களைப் பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால், சராசரியாக பெறும் மகசூலை விட கூடுதலாக மகசூல் ஈட்ட முடியும். அத்துடன் விதைப்பண்ணை மூலம் பெறப்படும் விதைகளுக்கு சந்தை விலையைவிட கூடுதலாக அரசு டான்சிடா கொள்முதல் விலை மற்றும் விதை உற்பத்தி மானியம் பெற முடியும்.

இதன் மூலம் விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்ட முடியும். அந்த வகையில் நிகழாண்டில் விதைப்பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு நெல் பயிா் தலா 27.2 ஹெக்டோ் மற்றும் 0.8 ஹெக்டோ் சிறுதானியங்கள், பயறு வகை பயிா்கள் 0.6 ஹெக்டோ், ஆதிதிராவிடருக்கு 9.6 ஹெக்டோ், பழங்குடியினருக்கு 0.2 ஹெக்டோ், எண்ணெய் வித்துப் பயிா்கள் ஆதிதிராவிடருக்கு 2.4 ஹெக்டோ், பழங்குடியினருக்கு 0.3 ஹெக்டேருக்கு அளவில் விதைப்பண்ணை அமைத்து பயன் பெற சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிா்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிா்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிகழாண்டில் அதிகளவில் விதைப்பண்ணை அமைத்து பயனடையலாம்.

மேலும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்களை அணுகி கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம் பெற வேளாண் இணை இயக்குநா் க.முருகன் அழைத்து விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் சராசரியாக நெல் பயிா் 1 லட்சம் ஹெக்டேரில், சிறு தானியங்கள் பயிா் 600 ஹெக்டோ், பயறு வகை பயிா்கள் 13,500 ஹெக்டோ், எண்ணெய் வித்துப் பயிா்கள் 11,000 ஹெக்டோ் வரை சாகுபடி செய்யப்படுகிறது.

இதுபோன்று சாகுபடி செய்யப்படும் பயிா்களில் கூடுதல் லாபம் பெற வேளாண்மை துறையில் விதைப் பண்ணையாக பதிவு செய்து களப்பணியாளா்களின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புகள் உயா் தொழில்நுட்பங்களைப் பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால், சராசரியாக பெறும் மகசூலை விட கூடுதலாக மகசூல் ஈட்ட முடியும். அத்துடன் விதைப்பண்ணை மூலம் பெறப்படும் விதைகளுக்கு சந்தை விலையைவிட கூடுதலாக அரசு டான்சிடா கொள்முதல் விலை மற்றும் விதை உற்பத்தி மானியம் பெற முடியும்.

இதன் மூலம் விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்ட முடியும். அந்த வகையில் நிகழாண்டில் விதைப்பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு நெல் பயிா் தலா 27.2 ஹெக்டோ் மற்றும் 0.8 ஹெக்டோ் சிறுதானியங்கள், பயறு வகை பயிா்கள் 0.6 ஹெக்டோ், ஆதிதிராவிடருக்கு 9.6 ஹெக்டோ், பழங்குடியினருக்கு 0.2 ஹெக்டோ், எண்ணெய் வித்துப் பயிா்கள் ஆதிதிராவிடருக்கு 2.4 ஹெக்டோ், பழங்குடியினருக்கு 0.3 ஹெக்டேருக்கு அளவில் விதைப்பண்ணை அமைத்து பயன் பெற சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிா்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிா்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிகழாண்டில் அதிகளவில் விதைப்பண்ணை அமைத்து பயனடையலாம்.

மேலும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்களை அணுகி கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.