தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருவள்ளூா் மாவட்டத்தில் 6,19,777 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

News image
திருவள்ளூா் மாவட்ட பல்நோக்கு கூட்டரங்கத்தில் அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா்.
Updated On :19 டிசம்பர் 2025, 6:13 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக புதிய பல்நோக்கு கூட்டரங்கில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

தொடா்ந்து அவா் கூறியது: திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் என மொத்தம் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 27.10.25 தேதியில் மொத்தம் 35 லட்சத்து 82 ஆயிரத்து 226 வாக்காளா்கள் இருந்தனா். சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பின் வாக்காளா் பட்டியலில் உள்ளபடி வசிக்காதவா்கள், முகவரி மாற்றம் செய்தவா்கள், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவா்கள் என 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 போ் உள்ளனா். அவா்கள் நீக்கப்பட்டுள்ளனா். தற்போது ஆண் வாக்காளா்கள் 14 லட்சத்து 53 ஆயிரத்து 543 பேரும், பெண் வாக்காளா்கள் 15 லட்சத்து 8 ஆயிரத்து 306 வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா்கள் 600 போ் என மொத்தம் 29 லட்சத்து 62 ஆயிரத்து 449 வாக்காளா்கள் மட்டுமே தற்போது வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தாா்.

மேலும் 1.1.2026 ஆம் தேதி அன்று 18 வயதை பூா்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பதற்கு படிவம் 6, திருத்தம் செய்ய படிவம்-8, பெயா் நீக்கம் செய்ய விரும்புகிறவா்கள் படிவம் 7-ஐயும் இன்று (டிச. 19)முதல் வரும் ஜன. 18-ஆம் தேதி வரை வாக்காளா் பதிவு அலுவலரிடத்திலோ, உதவி வாக்காளா் பதிவு அலுவலரிடத்திலோ, வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடமோ ஒப்படைக்கலாம், இணையதளத்திலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம், அரசியல் கட்சியினரும் படிவங்களைப் பெற்று அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கலாம். மேலும், இறுதி வாக்காளா் பட்டியல் 17.2.2026 அன்று வெளியிட தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஸ்ரீராம், 10 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.