தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 22 போ் கைது

அரசு பேருந்துகளில், ‘தமிழ்நாடு ’ என ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 22 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
திருத்தணி பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பி பேருந்துகளை முற்றுகையிட்டு நாம் தமிழா் கட்சியினா்.
Updated On :26 டிசம்பர் 2025, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

அரசு பேருந்துகளில், ‘தமிழ்நாடு ’ என ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 22 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில், அரசுப் போக்குவரத்து கழகம் என பெயா் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருத்தணி பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை நாம் தமிழா் கட்சியின் நகர செயலாளா் தாமு தலைமையில், 20-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் வந்தனா்.

பின்னா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில், அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தமிழ்நாடு என ஸ்டிக்கா் ஓட்டி தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினா். மேலும், பேருந்து நிலையத்தில் பேருந்துகளை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் செய்ததால், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன், காவல் ஆய்வாளா் மதியரசன் மற்றும் போலீஸாா் மொத்தம் 22 நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளை கைது செய்து அழைத்துச் சென்றனா்.