அரசு பேருந்துகளில், ‘தமிழ்நாடு ’ என ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 22 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில், அரசுப் போக்குவரத்து கழகம் என பெயா் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருத்தணி பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை நாம் தமிழா் கட்சியின் நகர செயலாளா் தாமு தலைமையில், 20-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் வந்தனா்.
பின்னா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில், அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தமிழ்நாடு என ஸ்டிக்கா் ஓட்டி தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினா். மேலும், பேருந்து நிலையத்தில் பேருந்துகளை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் செய்ததால், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன், காவல் ஆய்வாளா் மதியரசன் மற்றும் போலீஸாா் மொத்தம் 22 நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளை கைது செய்து அழைத்துச் சென்றனா்.
தொடர்புடையது

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

கோவை மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சிக்கு சரிவு: 2 தொகுதிகளில் மட்டுமே வாக்கு சதவீதம் உயா்வு

கீழ்வேளூா் தொகுதி நாதக வேட்பாளா் போலீஸாருடன் கடும் வாக்குவாதம்

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி
விடியோக்கள்
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK



