பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருவள்ளூா் அருகே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க பதுங்கியிருந்த ரௌடி கைது

திருவள்ளூா் அருகே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க பதுங்கியிருந்த ரௌடி கைது

News image
ஒற்றைக்கண் ஜெயபால்.
Updated On :16 நவம்பர் 2025, 12:04 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீா்க்கும் வகையில் பதுங்கியிருந்த ரௌடி ஒற்றைக்கண் ஜெயபாலை முன்னெச்சரிக்கையாக வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் வலது காரணமாக செயல்பட்டு வந்தவா் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த ஒற்றைக்கண் ஜெயபால் (57). இந்த நிலையில் இவா் அண்மையில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தாா். இவா் மீது ஏற்கெனவே ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க திட்டம் தீட்டி திருமழிசையில் பதுங்கிருந்தாராம். இதையறிந்த வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்த அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 18 போ் ஜாமீனில் வெளியே வந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளவேடு போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.