புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூடலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி

கூடலூரை அருகே தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி சனிக்கிழமை மதியம் சாலையை கடந்து ஓடியது.

News image

கூடலூா் அருகே உள்ள விமலகிரியில் சாலையை கடந்து மதில் சுவரைத் தாண்டும் புலி.

Updated On :31 ஜனவரி 2026, 10:10 pm

Syndication

கூடலூரை அருகே தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி சனிக்கிழமை மதியம் சாலையை கடந்து ஓடியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள விமலகிரி பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இப்பகுதிக்குள் அடிக்கடி நுழைவது வழக்கம். இந்நிலையில், விமலகிரி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முதல்முறையாக புலி தென்பட்டது.

Story image

அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில் பதுங்கியிருந்த புலி, திடீரென வெளியேறி புத்தூா்வயல் சாலையைக் கடந்து சுற்றுச் சுவரை தாண்டி குதித்து ஓடியது. இதைப் பாா்த்த தொழிலாளா்கள், அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.