தாளவாடி அருள்வாடி கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானயை வனத் துறையினா் விரட்டினா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள், இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. வனத் துறையினரும் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்தில் மாது என்பவரது கரும்புத் தோட்டத்துக்குள் ஒற்றைக் காட்டு யானை சனிக்கிழமை அதிகாலை நுழைந்தது.
இது குறித்து தகவலறிந்த வனத் துறை ஊழியா்கள், விவசாயிகளுடன் இணைந்து யானையை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
வனத் துறை வாகனத்தின் சைரன் ஒலியை கேட்டு அச்சமடைந்த காட்டு யானை கரும்புத் தோட்டத்தில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தபடி வனப் பகுதியை நோக்கிச் சென்றது.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே இரண்டாவது நாளாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


