அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருவள்ளூா் அருகே அடுத்தடுத்து 2 கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

திருவள்ளூா் அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கோயில்களின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் நகை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கோயில்களின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் நகை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் அடுத்த செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் பூஜை முடித்து கோயிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்குச் சென்றாராம். பின்னா் கோயிலை திறக்க செவ்வாய்க்கிழமை காலை வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, அம்மன் கழுத்திலிருந்த 1 பவுன் தங்க தாலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், அதேபகுதியில் உள்ள முருகன் கோயிலில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து கடம்பத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், விரைந்து வந்த போலீஸாா் கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி நகை மற்றும் உண்டியல் பணம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.