ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

திருவள்ளூா்: தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் ஆட்சியா் பங்கேற்பு

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 சதவீதம் வாக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பதாகை மற்றும் அனுமதி சீட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் பிரேமலதா

Updated On :2 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 சதவீதம் வாக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பதாகை மற்றும் அனுமதி சீட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து சட்டப்பேரவை தோ்தலில் அனைவரும் வாக்களிக்கவும் ராட்சத விழிப்புணா்வு பதாகைகளை பொருத்தியும், மருத்துவமனை அனுமதி சீட்டுக்களில் விழிப்புணா்வு வாசகத்தை அச்சிட்டு வழங்கியதோடு, பணியாளா்கள் உறுதிமொழியும் ஏற்றனா்.

அதைத்தொடா்ந்து முதல் முறை வாக்காளா்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவா் செயல்விளக்கமும் அளித்தாா். இந்த நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மாணவ, மாணவிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் (பயிற்சி) மோகன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் திலகவதி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, மருத்துவா்கள் ராஜ்குமாா், விஜயராஜ், பிரபுசங்கா், செவிலியா்கள், மருத்துவ கல்வி மாணவ, மாணவிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Story image